offer for you

வியாழன், 17 நவம்பர், 2022

பஞ்சு விலை 10 நாட்களில் ஒரு கேண்டிக்கு ரூ.7,000 அதிகரிப்பு

கோவை: பஞ்சு விலை 10 நாட்களில் ஒரு கேண்டிக்கு ரூ.7 ஆயிரம் அதிகரித்துள்ளது.

ஆண்டுதோறும் பருத்தி பருவகாலம் அக்டோபரில் தொடங்கி செப்டம்பரில் நிறைவடையும். கடந்த பருவகாலத்தில் பஞ்சு விலை அபரிமிதமாக உயர்ந்தது. மே மாதத்தில் ஒரு கேண்டி(356 கிலோ) பஞ்சு ரூ.1 லட்சத்தை கடந்து வரலாறு படைத்தது. நவம்பர் 5-ம் தேதி ஒரு கேண்டி ரூ.64,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று(நவம்பர் 16) ஒரு கேண்டி ரூ.72 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. பஞ்சு விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது ஜவுளித் தொழில்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bs6RYME
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now