
மும்பை: மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் செவ்வாய்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 274 புள்ளிகள் (0.45 சதவீதம்) உயர்ந்து 61,418 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 84 புள்ளிகள் (0.46 சதவீதம்) உயர்வடைந்து 18,244 ஆக இருந்தது.
மூன்று நாட்களாக வீழ்ச்சி கண்டுவந்த பங்குச்சந்தை செவ்வாய்கிழமை சிறிது ஏற்றத்துடனேயே தொடங்கின. காலை 09:50 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 85.45 புள்ளிகள் உயர்வுடன் 61,230.29 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 16.65 புள்ளிகள் உயர்வடைந்து 18,176.60 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CgFxGHo
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக