offer for you

ஞாயிறு, 6 நவம்பர், 2022

எலான் மஸ்க் கையகப்படுத்திய நிலையில் ட்விட்டரில் இருந்து 50 சதவீத ஊழியர்கள் பணி நீக்கம்

கலிபோர்னியா: ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த வாரம் கையகப்படுத்திய நிலையில், ட்விட்டரின் 50% ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு (ரூ.3.65 லட்சம் கோடி) வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கடந்த வாரம் முழுமையடைந்தது. அதையடுத்து ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்கின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. முதல் நடவடிக்கையாக ட்விட்டரின் சிஇஓ-வாக பொறுப்பு வகித்து வந்த பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தார். மேலும், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் ஆகியோரையும் பணி நீக்கம் செய்தார். மேலும் பல ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RS3KQc1
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now