
புதுடெல்லி: இந்தியாவில் ஜப்பான் நிறுவனங்களின் முதலீட்டை அதிகரிக்கும் வகையில் சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கியுடன் (ஜேபிஐசி) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்துக்கும் (என்ஐஐஎஃப்) சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கிக்கும் இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. நிதி கட்டமைப்பு இந்த ஒப்பந்தத்தின்படி, இவ்விரு அமைப்புகளும் இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்யும் திட்டங்களில் முதலீடு செய்யும். இதற்கென்று இந்தியா - ஜப்பான் நிதி கட்டமைப்பு உருவாக்கப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FriJ5Vk
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக