offer for you

திங்கள், 12 டிசம்பர், 2022

இதுவரை ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணம் மீட்பு: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: இதுவரை ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மத்திய அரசு மீட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி எவ்வாறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்பது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது: "மத்திய அரசின் திட்டங்களில் ஒரு ரூபாயில் 15 பைசா மட்டுமே மக்களைச் சென்றடைவதாக பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி கூறினார். ஆனால், தற்போது நேரடி வங்கி பணப் பரிவர்த்தனை மூலம் 100 சதவீதம் நிதி பயனாளிகளைச் சென்றடைகிறது. இது திடீரென நடந்துவிடவில்லை. இதற்குப் பின்னால் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டம் இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/I4SDuCs
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now