offer for you

ஞாயிறு, 11 டிசம்பர், 2022

காருக்கு 3, பைக்குக்கு 5 ஆண்டு இன்சூரன்ஸ்: காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை

புதுடெல்லி: கார்கள் மற்றும் பைக்குகளுக்கான இன்சூரன்ஸை முறையே 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகளுக்கு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து ஐஆர்டிஏஐ மேலும் தெரிவித்துள்ளதாவது: வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த, வசதியான தேர்வை அனுமதிக்கும் வகையிலேயே இந்த புதிய காப்பீட்டு திட்டத் துக்கு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, மோட்டார் வாகன மூன்றாம் நபர் காப்பீடு மற்றும் சொந்த சேதக் காப்பீடு ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய நீண்ட கால காப்பீட்டுக்கான வரைவு மசோதாவில் உருவாக்கப்பட்டது. இதில், கார்களுக்கு மூன்று ஆண்டுகள், இருசக்கர வாகனங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கான காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த முன் மொழியப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rTg2BMs
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now