offer for you

வெள்ளி, 23 டிசம்பர், 2022

4-வது நாளாக பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 981 புள்ளிகள் சரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் வார இறுதி நாளில் கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 981 புள்ளிகள் (1.6 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 59,845 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 321 புள்ளிகள் (1.8 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 17,807 ஆக இருந்தது.

வெள்ளிக்கிழமை 335 புள்ளிகள் சரிவுடனேயே தொடங்கிய வர்த்தகம் தொடர்ந்து கடும் வீழ்ச்சியை நோக்கிச் சென்றது. காலை 10:28 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 649.68 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 60,176.54 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 166.95 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,960.40 ஆக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uMWOPKt
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now