
சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணி செய்வது தொடர்பான தளர்வுகளைக் கொண்டுவர சிறப்புப் பொருளாதார மண்டல சட்டத்தில் மத்திய வர்த்தகத்துறை மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. திருத்தப்பட்ட இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தகவல்களை அனைத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திருத்தம், துறைசார்ந்த வல்லுநர்கள், பணிபுரிபவர்கள் மற்றும் தொடர்புடைய இதர அமைப்புகளோடு கலந்தாலோசனை செய்த பிறகு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் 31.12.2023 வரை அமலில் இருக்கும். சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் நிறுவனங்களில் பணிபுரியும் 100 சதவீத பணியாளர்களுக்கும் இந்த சட்டத்திருத்த நடவடிக்கைகள் பொருந்தும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/y5vsAcZ
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக