
புதுடெல்லி: வருடத்தின் முதல் நாளான இன்று 19 கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டருக்கான விலை ரூ.25 அதிகரிக்கப்பட்டு சென்னையில் ரூ.1,917க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையேற்றத்தால் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் போன்றவை உணவுப் பொருட்கள், தேநீர் விலையை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
கடந்த 2022 மே 19-ம் தேதிக்கு பின்னர் வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை தொடர்ந்து குறைக்கப்பட்டே வந்தது. அதே சமயம், வீட்டில் சமையல் செய்ய பயன்படுத்தும் சிலிண்டரின் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டுவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nucqwYD
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக