offer for you

வெள்ளி, 6 ஜனவரி, 2023

3-வது நாளாக தொடர்ந்த வீழ்ச்சி | சென்செக்ஸ் 453 புள்ளிகள் சரிவு 

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வார இறுதி நாள் வர்த்தகம் பெரும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 453 புள்ளிகள் (0.75 சதவீதம்) சரிவடைந்து 59,900 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி134 புள்ளிகள் (0.74 சதவீதம்) சரிந்து 17,859 ஆக இருந்தது.

பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தொடங்கியது. காலை 09:51 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 59.87 புள்ளிகள் உயர்ந்து 60,413.14 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 31.10 புள்ளிகள் உயர்ந்து 18,023.25 ஆக இருந்தது. தொடர்ந்து ஏறுவதும் இறங்குவதுமாக நிலையில்லாமல் பயணித்தது. வர்த்தக நேரத்தின்போது, சென்செக்ஸ் 683 புள்ளிகள் குறைந்து 59,670 வரைச் சென்றது. நிஃப்டி 17,796 வரை இறங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6YUZt4g
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now