
இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தொழில் நெசவு. நெசவுத் தொழிலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. நமது நாட்டில் கிராமங்கள், சிறு நகரங்களில் வசிக்கும் 35 லட்சம் நெசவாளர்களில், 25 லட்சம் பேர் – பெண்கள்! நெசவுத் தொழிலை வலுப்படுத்தினால், கிராமப்புற வளர்ச்சி, மகளிர் முன்னேற்றம், சமூக மேம்பாடு,தற்சார்பு இந்தியா…. என பல நோக்கங்கள் தாமாக நிறைவேறும்.
சைதாப்பேட்டை, குன்றத்தூர் உள்ளிட்ட சென்னை மாநகரை ஒட்டிய பகுதிகளிலேயே சுமார் ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்தன. பெரிய முதலீடு தேவையில்லை; உற்பத்திப் பணியில் துளியும் ஆபத்து இல்லை; சுற்றுச்சூழலுக்கு சற்றும் பாதிப்பு இல்லை. ஆனால் ஆதாயங்கள் மட்டும் நிரம்ப உண்டு. சந்தையின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் ஆற்றல், பண்பாட்டுப் பாரம்பரிய அடையாளங்கள் அழியாது காத்தல், நம்முடைய பருவநிலைக்கு ஏற்ற தனித்துவமான வடிவமைப்புகள், சாமானியரின் ‘கையைக் கடிக்காத’ மிகக் குறைந்த விலையில் தரமான பொருள்…. நெசவுக்கு எதுவும் ஈடில்லை காண்பீர்! 1970-களில் விசைத்தறிகள் பெருகத் தொடங்கின.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CAf3Ruh
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக