offer for you

திங்கள், 9 ஜனவரி, 2023

கறுப்புப் பண விவகாரம் இனி இந்தியாவுக்கு பிரச்சினையாக இருக்காது: ஸ்விட்சர்லாந்து

புதுடெல்லி: கறுப்புப் பண விவகாரம் இனி இந்தியாவுக்கு பிரச்சினையாக இருக்காது என்று இந்தியாவுக்கான ஸ்விட்சர்லாந்து தூதர் ரால் ஹெக்னர் தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், ''இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் கறுப்புப் பண விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தப்படி இரு நாடுகளும் தங்களுக்குள் இருக்கும் வங்கி தொடர்பான ஆவணங்களை தொடர்ந்து பரிமாறிக்கொள்கின்றன. இதுவரை இரு நாடுகளும் பல்வேறு முறை தகவல்களை பரிமாறிக்கொண்டுள்ளன. எனவே, கறுப்புப் பண விவகாரம் இந்தியாவுக்கு இனி பிரச்சினையாக இருக்காது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு ஒரு சிறிய அளவிலான சந்தேகம்கூட இதுவரை எழவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/H7tUwDG
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now