offer for you

வெள்ளி, 20 ஜனவரி, 2023

விதிமுறைகளில் எளிமை, ஆராய்ச்சிக்கு ஊக்கத் தொகை - பட்ஜெட்டில் மருந்து நிறுவனங்கள் எதிர்பார்ப்பு

புதுடெல்லி: வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பில் விதிமுறைகளில் எளிமை மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஊக்குவிக்க தேவையான நிதி ஒதுக்கீடுகளை எதிர்பார்ப்பதாக மருந்துத் துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து இந்திய மருந்தியல் கூட்டமைப்பின் (ஐபிஏ) பொது செயலர் சுந்தரம் ஜெயின் கூறியதாவது: உள்நாட்டு மருந்து வர்த்தகம் தற்போது 50 பில்லியன் டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.4 லட்சம் கோடியாகும். இது, வரும் 2030-ம் ஆண்டுக்குள் 130 பில்லியன் டாலராகவும், 2047-க்குள் 450 பில்லியன் டாலராகவும் அதிகரிக்க வேண்டும் என்பதே மருந்து துறை கூட்டமைப்பின் விருப்பம் மற்றும் இலக்காக உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZfCKOv7
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now