
அரூர்: தருமபுரி மாவட்டம் அரூர் அருகே ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் சார்பில் விவசாயி ஒருவர் வீட்டில் இருந்த படியே ஆன்லைன் முறையில் பருத்தியை விற்பனை செய்தார்.
தருமபுரி மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு, தேசிய மின்னணு வேளாண் சந்தை (இ-நாம்) திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் நேற்று முதல் நபராக கம்பைநல்லூர் பகுதி விவசாயி ஒருவர் வீட்டில் இருந்தபடியே 3 குவிண்டால் பருத்தியை விற்பனை செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/95dMnhe
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக