offer for you

வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

தொழில் தொடங்குவதை எளிதாக்க நடப்பு ஆண்டு இறுதிக்குள் அனைத்து மாநிலங்களும் ஒற்றைச் சாளர கட்டமைப்பின் கீழ் கொண்டு வரப்படும்

புதுடெல்லி: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் 32 மத்திய அரசு துறைகள் நடப்பு ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் தேசிய ஒற்றைச்சாளர கட்டமைப்பின் கீழ் கொண்டுவரப்படும் என்று மத்திய தொழில்மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது. இந்தக் கட்டமைப்பின் வழியே நிறுவனங்கள் தங்கள் தொழில் தொடர்பான அரசு அனுமதிகளை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும்.

தொழில் தொடங்குதலை எளிமையாக்கும் வகையில் ஒற்றைச் சாளர கட்டமைப்பை மத்திய அரசு 2021 ஆண்டு முன்னெடுத்தது. இதன் மூலம் மத்திய, மாநில அரசுகளின் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சகங்களிடமிருந்து தொழில் செயல்பாடுகள் தொடர்பான அனுமதிகளைப் பெற்றுக் கொள்ளமுடியும். அனுமதி விண்ணப்பங்களின் நிலையையும் கண்காணிக்க முடியும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/REAHsFC
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now