
புதுடெல்லி: அதானி குழும நிறுவனங்கள் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவற்றின் பங்குகள் செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளன என்றும் ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட அறிக்கையில் குற்றம் சாட்டியது. இதனால் அந்த குழும பங்குகள் 50 சதவீதத்துக்கு மேல் மளமளவென சரிந்தன. இந்த விவகாரம் இந்தியாவில் புயலைக் கிளப்பி உள்ளது.
இதனிடையே, இந்த வார தொடக்கத்தில் கடனின் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்தப்போவதாக அதானி குழுமம் அறிவித்தது. இதனால் அதன் பங்குகள் உயரத் தொடங்கின.
இந்த சூழ்நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர் ராஜீவ் ஜெயினுக்கு சொந்தமான ஜிக்யூஜி பார்ட்னர்ஸ் நிறுவனம், துணிச்சலுடன் அதானி குழுமத்தின் 4 நிறுவன பங்குகளில் ரூ.15,446 கோடியை முதலீடு செய்தது. அடுத்த 2 நாட்களில் அதானி குழும பங்குகள் மளமளவென உயர்ந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QHzA1hs
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக