
புதுடெல்லி: கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை தொடர்பாக உலக நாடுகள் கட்டுப்பாடுகளை கொண்டுவரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்நிலையில், கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில், மத்திய அரசு கிரிப்டோகரன்சி பரிவர்த்தனையை பண மோசடி தடுப்புச் சட்டத்துக்குள் கொண்டுவந்துள்ளது.
மேலும், கிரிப்டோகரன்சி பரிவர்த்தனையை கையாளும் நிறுவனங்கள், அரசுக்கு தகவல் அளிக்க வேண்டிய நிறுவனங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அந்நிறுவனங்கள் தங்கள் தளத்தில் நிகழும் அனைத்துப் பரிவர்த்தனைகளையும் முறையாக பதிவு செய்ய வேண்டும். அந்தப் பரிவர்த்தனை குறித்த விவரங்களை, தேவைப்படும் சமயங்களில் அரசுக்கு வழங்க வேண்டும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/odPRWY2
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக