
வதோதரா: மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறாவிட்டாலும் கூட, நோயாளிக்கு உரிய மருத்துவக் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று வதோதரா நுகர் வோர் விவகார தீர்வு ஆணையம் ஒரு வழக்கில் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்சந்திர ஜோஹி. 2016 ஆண்டு, அவரது மனைவிக்கு உடல்நலம் குன்றிய நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார். ஒரு நாள் தங்கி சிகிச்சை பெற்று அவர்கள் வீடு திரும்பினர். சிகிச்சைக்கு ரூ.44,500 செலவானது. அவர் மருத்துவக் காப்பீடு செய்திருந்த நிலையில், காப்பீட்டு நிறுவனத்தில் சிகிச்சைக்கான செலவை சமர்ப்பித்து காப்பீட்டுத் தொகையை கோரினார். ஆனால், அந்த காப்பீட்டு நிறுவனமோ, அவரது மனைவி 24 மணி நேரம் மருத்துவமனையில் தங்க வைக்கப்படவில்லை என்பதால் நிறுவன விதிப்படி காப்பீடு வழங்க முடியாது என்று கூறி அவரது காப்பீட்டுக் கோரிக்கையை நிராகரித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4sm7ODr
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக