
கலிபோர்னியா: பங்குகள் மீதான தனது உரிமையை தனக்குத் தெரியாமல் மாற்றிவிட்டதாக ‘சோஹோ’ (zoho) நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி பிரமிளா ஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதேவேளையில், ‘இது கற்பனைக் கதை” என்று அதை ஸ்ரீதர் வேம்பு திட்டவட்டமாக மறுத்துள்ளார். தம்பதியர் இருவரும் கடந்த 2021-ல் விவாகரத்து வேண்டி கலிபோர்னியா நீதிமன்றத்தை அணுகினர். தற்போது இந்த வழக்கு அங்கு நடைபெற்று வருகிறது.
அமெரிக்க நாட்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் இது குறித்த செய்தி வந்துள்ளது. அதில் ஸ்ரீதர் வேம்பு தனது மனைவி மற்றும் ஆட்டிசம் பாதித்த மகனுக்கு நியாயமாக சேர வேண்டிய பங்குகளை தனது சகோதரியின் பெயருக்கு மாற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் பிரமிளா தரப்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களை கொண்டு இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுதான் இப்போது அதிர்வலைகளை எழுப்பி உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mYvUwL3
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக