
கோவில்பட்டி: விளாத்திகுளம், புதூர் பகுதியில் சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் முண்டு வத்தல் மற்றும் சம்பா வத்தல் சாகுபடி நடக்கிறது. கரிசல் நிலங்களில் முண்டு வத்தல் விளை விக்கப்படுவதால் அதன் ருசி, காரத்தன்மை அதிகமாக இருக்கிறது.
விளாத்திகுளம், புதூர் பகுதிகள் தவிர ராமநாதபுரம் மாவட்டத்தில் சில பகுதிகள், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியிலும் முண்டு வத்தல் சாகுபடி நடைபெறுகிறது. தற்போது முண்டு மற்றும் சம்பா வத்தல் குவிண்டால் ரூ.18 ஆயிரத்துக்கு விலை போகிறது. கடந்த ஆண்டு முண்டு வத்தல் குவிண்டால் ரூ.32 ஆயிரம் வரை விற்பனையானது. இந்தாண்டு போதிய மழையின்றி மிளகாய் செடிகள் பாதிக்கப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bGkKM2e
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக