
அகமதாபாத்: அதானி - ஹிண்டன்பர்க் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி வரவேற்றுள்ளார்.
துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் கெளதம் அதானி. 60 வயதான அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வந்ததாகவும், பங்குச் சந்தையில் முறைகேடுகள் செய்துள்ளதாகவும், அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் உள்ளது என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் கடந்த ஜனவரியில் அறிக்கை வெளியிட்டது. அதன் பின்னர் தனது சொத்து மதிப்பில் சரிவை கண்டார் அதானி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/q5pjiXu
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக