
சேலம்: தேசிய மின்னணு சந்தை மூலமாக, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் தருமபுரி விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட தக்காளி சேலத்தில் விற்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தக்காளி விளைச்சல் அதிகரித்து வரத்து அதிகமாக உள்ளது. குறிப்பாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் அபரிமிதமாக இருக்கிறது. இதனால், கடந்த ஒரு மாதமாக அதன் விலை கிலோ ரூ.8 முதல் ரூ.15 வரை என்ற விலையிலேயே விற்கப்படுகிறது. எனினும் கிலோ ரூ.5 என்ற விலைக்கே இடைத்தரகர்கள் கொள்முதல் செய்வதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hqL36GT
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக