
வாஷிங்டன்: தொழில் நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு விலகியே இருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் மாநாட்டில் பங்கேற்ற நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதானி விவகாரம் தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், ''தொழில் நிறுவனங்களிடம் இருந்து அரசு விலகியே இருக்கிறது. அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்களை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழு விசாரித்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிமன்ற விசாரணையில் இந்த விவகாரம் இருப்பதால் இது குறித்து பொதுவெளியில் கூறுவது பொருத்தமாக இருக்காது'' என்று தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/St3eo7c
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக