offer for you

ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

விவசாயத்தை பிரதானமாக கொண்ட சூளகிரியில் நாற்று பண்ணை அமைக்க வலியுறுத்தல்: விரைவில் நடவடிக்கை என அதிகாரிகள் தகவல்

கிருஷ்ணகிரி: விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட சூளகிரியில் தோட்டக் கலைத் துறை சார்பில் நாற்றுப் பண்ணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். சூளகிரி வட்டத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் 600-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

காய்கறி, மலர் சாகுபடி: இக்கிராமங்களில் விவசாயிகள் காய்கறி மற்றும் மலர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு அறுவடை செய்யப்படும் விளை பொருட்கள் சூளகிரி, ஓசூர் சந்தைகளில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இப்பகுதி விவசாயிகள் காய்கறி மற்றும் மலர் நாற்றுகளைத் தனியார் பண்ணைகளிலிருந்து கொள்முதல் செய்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7v1jlKe
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now