
புதுடெல்லி: பொதுத் துறை வங்கிகளின் லாபம் கடந்த நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. முந்தைய 2021-22-ம் நிதியாண்டில் இந்த 12 பொதுத் துறை வங்கிகளின் லாபம் ரூ.66,539.98 கோடியாக மட்டுமே இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது 2023-ல் வங்கிகளின் லாபம் 57 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
கடந்த 2017-18-ம் நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகள் ரூ.85,390 கோடி அளவுக்கு நிகர இழப்பை சந்தித்திருந்தன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவற்றின் லாபம் ரூ.1,04,649 கோடியை எட்டியுள்ளது கவனிக்கத்தக்கது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NZ7RIfB
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக