
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மகசூல் அதிகரிப்பால், 1.50 கோடி தேங்காய் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது. இதனால், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மூலம் தென்னை விவசாயிகளுக்கு மறுவாழ்வு கொடுக்க அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா, மலர்களுக்கு அடுத்ததாக விவசாயிகள் அதிகளவில் தென்னை சாகுபடியில் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள், வியாபாரிகள், சிறுதொழில் முனைவோர் என பலர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தென்னை விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக பெய்த மழையால், வழக்கத்தை விட மகசூல் அதிகரித்து, தேங்காய் விற்பனை வெகுவாக சரிந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kupiZrN
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக