
புதுடெல்லி: ஒரே நேரத்தில் ரூ.20000 மதிப்பிலான ரூ.2000 நோட்டுகளை வங்கியில் மாற்றும்போது பொது மக்கள் அடையாள அட்டை ஏதும் கொடுக்கத் தேவையில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. மேலும், இதற்காக கோரிக்கை படிவம் ஏதும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளது.
இது தொடர்பாக இன்று (மே 21) ஆம் தேதி எஸ்பிஐ ஒரு சுற்றறிகையை வெளியிட்டுள்ளது. அதில், ரூ.2000 நோட்டுகளை மாற்ற கோரிக்கை படிவம், அடையாள அட்டை தேவையில்லை என்று கூறியதோடு ரிசர்வ் வங்கியின் மற்ற விதிமுறைகள் அனைத்தும் அப்படியே பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/THJDVOR
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக