
நியூபரி: அடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் சுமார் 11,000 ஊழியர்களை உலக அளவில் பணிநீக்கம் செய்ய உள்ளதாக பிரிட்டிஷ் நாட்டின் டெலிகாம் நிறுவனமான வோடபோன் அறிவித்துள்ளது. இதனை அந்த நிறுவனத்தின் சிஇஓ மார்கெரிட்டா டெல்லா வால்லே தெரிவித்துள்ளார். தங்கள் நிறுவனத்தின் செலவுகளை குறைக்கும் வகையில் இதைச் செய்ய வேண்டி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பரில் ஆட்குறைப்பு குறித்து வோடபோன் நிறுவனம் முதல் முறையாக அறிவித்தது. இந்நிலையில், அந்த நிறுவனத்தின் புதிய சிஇஓ இந்த அறிவிப்பை தற்போது அறிவித்துள்ளார். கடந்த மாதம் அவர் இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார். முன்னதாக, வோடபோன் நிறுவனத்தின் நிதித்துறை தலைமை பொறுப்பை அவர் கவனித்து வந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sWCzaBn
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக