offer for you

வெள்ளி, 19 மே, 2023

போலி ஜிஎஸ்டி பதிவுகளை அடையாளம் காண நாடு முழுவதும் சிறப்பு சோதனை: உங்கள் நிறுவனமும் சோதிக்கப்படுமா?

போலி ஜிஎஸ்டி ஆவணங்கள் மூலம் வரி ஏய்ப்பு செய்வது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில்,போலி ஜிஎஸ்டி பதிவைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில வரித் துறை அதிகாரிகள் 2 மாதங்களுக்கு சிறப்பு சோதனையை தொடங்கி உள்ளனர்.

நாடு முழுவதும் ஒரே வரி முறையைக் கொண்டுவரும் நோக்கில் 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு அறிமுகம் செய்தது.தற்போது நாடு முழுவதும் 1.39 கோடி தொழில்கள் ஜிஎஸ்டி-யின் கீழ் பதிவு செய்துள்ளன. இதுவரை இல்லாத அளவில், கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகி உள்ளது. எனினும், இதில் பல்வேறு முறைகேடுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ucP68fr
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now