
சென்னை: தொழில்முனைவோர் மற்றும் வங்கி அதிகாரிகள் இடையே இணைப்பை ஏற்படுத்தும் வகையில், இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் தென்னிந்திய கவுன்சில் சார்பில் நடைபெறும் எம்எஸ்எம்இ மாநாடு சென்னையில் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது.
இது தொடர்பாக இந்திய பட்டய கணக்காளர் நிறுவன (ICAI) தென்னிந்திய கவுன்சில் தலைவர் எஸ்.பன்னா ராஜ் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை (MSME), இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும்11 கோடியே 30 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். எம்எஸ்எம்இ நிறுவனங்கள் உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதம், ஏற்றுமதியில் 50 சதவீதம் பங்களிக்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PfaUj6p
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக