
கோவை: கட்டமைப்பு வசதிகள், தொழிலாளர்கள் என அனைத்து வசதிகள் இருந்தும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேல் தமிழகத்தில் என்டிசி நூற்பாலைகள் முடங்கிக் கிடக்கின்றன. தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் துருப்பிடித்து ஸ்கிராப்பாக மாறி வருகின்றன.
கடந்த 1974-ல் தேசிய பஞ்சாலைக் கழகம் (என்டிசி) அமைக்கப்பட்டு 123 மில்கள் இணைக்கப்பட்டன. லாப நோக்கம் இல்லாமல் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் மட்டும் கவனம் செலுத்தப்பட்டது. 123 என்டிசி நாற்பாலைகளில் தமிழகத்தில் 15 நுாற்பாலைகள் செயல்பட்டு வந்தன. நாடு முழுவதும் ரயில்வே, காவல்துறை, ராணுவம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளுக்கு ஆடைகள் விநியோகம் செய்யும் பணி வாய்ப்புகள் கிடைத்து அதன்பேரில் நூல் தயாரிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. நாளடைவில் படிப்படியாக 100 நுாற்பாலைகள் மூடப்பட்டன. கடந்த 15 ஆண்டுகளாக 23 நுாற்பாலைகள் மட்டுமே நாடு முழுவதும் செயல்பட்டு வந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wVQui1
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக