offer for you

சனி, 3 ஜூன், 2023

திருப்பூரில் கடந்த 5 ஆண்டுகளில் தொழிலில் இருந்து வெளியேறிய 40% பின்னலாடை நிறுவனங்கள்: தொழில்துறையினர் வேதனை

திருப்பூர்: திருப்பூர் பின்னலாடைத் தொழில் நாளுக்குநாள் பல்வேறு காரணங்களால் வளர்ச்சிக்கு பதிலாக வீழ்ச்சியை நோக்கி செல்வதாக தொழில் துறையினர் கருதுகின்றனர். பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, கரோனா தொற்று, உலக நாடுகளிடையே போர், வாங்கும் திறன் குறைந்தது என பல்வேறு காரணங்களால் இன்றைக்கு திருப்பூர் பின்னலாடைத் தொழில் தத்தளிக்கிறது.

திருப்பூர் தொழில்துறையினர் கூறும்போது,“கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு தற்போது திருப்பூர் மோசமான நிலைக்குசென்றுகொண்டிருக்கிறது. குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அதலபாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கின்றன. 90 சதவீதம்சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பாதிப்பு என்பது நிச்சயம் பின்னலாடைத் தொழிலும் அதனை சார்ந்துள்ள தொழிலாளர்களிடமும் எதிரொலிக்கும்” என்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cNjEk6w
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now