
புதுடெல்லி: ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என இந்திய ரிசர்வ் வங்கி இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் மேக்ரோ பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு, ரெப்போ வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாகவே தொடரும் என்று ஆர்பிஐ ஆளுநர் இன்று (ஜூன் 8) தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற நிதிக் கொள்கை கமிட்டி கூட்டத்தில் முடிவில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லாததால், எஸ்டிஎஃப் (ஸ்டான்டிங் டெபாசிட் ஃபேசிலிடி) விகிதம் 6.25 ஆகவும், மார்ஜினல் ஸ்டான்டிங் ஃபேடிலிடி மற்றும் வங்கி விகிதம் 6.75 ஆகவும் தொடரும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ez0hqQs
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக