
மேட்டூர்: மீண்டும் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வால், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்படும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் தொழிற்பேட்டையில் 200-க்கும் மேற்பட்ட குறு,சிறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் உரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் அந்நிய செலாவணி கிடைக்கிறது. இந்த தொழிற்பேட்டையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jdthHcB
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக