
ஓசூர்: அழுகல் நோயால் சின்ன வெங்காயம் மகசூல் பாதிக்கப்பட்டு, ஓசூர் சந்தையில் கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மழையால் வெளிமாநில கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. ஓசூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் காய்கறிகள் மற்றும் சின்ன வெங்காயத்தை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
பத்தலப்பள்ளி சந்தை: இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் சின்ன வெங்காயம் ஓசூர் அருகே பத்தலப்பள்ளி காய்கறி சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு, தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கர்நாடக, ஆந்திர, கேரள மாநிலத்துக்கு விற்பனைக்குச் செல்கின்றன. கடந்த ஒரு மாதமாக தக்காளி, பீன்ஸ், இஞ்சி, பூண்டு உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்த நிலையில், கடந்த வாரம் வரை சின்ன வெங்காயம் கிலோ ரூ.50-க்கு விற்பனையானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RsE6crg
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக