
மும்பை: கடந்த புதன்கிழமை இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் ப்ரீபெய்ட் கார்டுகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை வெளியிட்டது. அதில் முதன்முறையாக 'கார்டு போர்ட்டபிளிட்டி' என்றொரு முக்கியமான அம்சத்தை ஆர்பிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு நெட்வொர்க்கை வாடிக்கையாளர்களே தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்துகொள்வது பற்றி அந்த வரைவு அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இந்த நடைமுறை அமலுக்கு வந்தால் இது வங்கிப் பரிவர்த்தனைகளில் புரட்சிகரமான மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/l7vdZO6
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக