offer for you

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

வெங்காய விலையை கட்டுப்படுத்த 3 லட்சம் மெட்ரிக் டன் இருப்பை விடுவிக்க மத்திய அரசு முடிவு

புதுடெல்லி: இந்த ஆண்டு உள்ள 3 லட்சம் மெட்ரிக் டன் வெங்காய கையிருப்பை விடுவிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்த ஆண்டு உள்ள 3 லட்சம் மெட்ரிக் டன் வெங்காய கையிருப்பை விடுவிக்க மத்திய நுகர்வோர் விவகாரத் துறை முடிவு செய்துள்ளது. இத்துறையின் செயலாளர் ரோஹித் குமார் சிங் ஆக.10ம் தேதியன்று, தேசிய வேளாண் கூட்டமைப்பு (நாஃபெட்) மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்.சி.சி.எஃப்) அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து இதற்கான வழிமுறைகளை இறுதி செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/olxJubO
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now