offer for you

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2023

“மக்கள் 4 மாதங்களுக்கு வெங்காயம் சாப்பிடாமல் இருந்தால் எதுவும் ஆகிவிடாது” - மகாராஷ்டிர அமைச்சர்

மும்பை: வெங்காயத்துக்கு 40 சதவீதம் ஏற்றுமதி வரி விதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு விவசாயிகள், வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மகாராஷ்டிர அமைச்சர் தாதா பூஸ், "இரண்டு முதல் நான்கு மாதங்களுக்கு மக்கள் முக்கியமான காய்கறிகளை சாப்பிடவில்லையென்றால் எதுவும் ஆகிவிடாது" என்று தெரிவித்துள்ளார்.

வெங்காயத்தின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தைகளில் விநியோகத்தை அதிகரிக்கவும் மத்திய அரசு ஆகஸ்ட் 19-ம் தேதி வெங்காயத்துக்கான ஏற்றுமதியை 40 சதவீதம் உயர்த்தியது. வரும் டிசம்பர் 31 வரை வரி உயர்வு அமலில் இருக்கும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LAdHzV4
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now