offer for you

வியாழன், 24 ஆகஸ்ட், 2023

இ-வர்த்தகம் | பெரிய, சிறிய வர்த்தகர்கள் இடையே சமமான போட்டியை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி

புதுடெல்லி: இ-வர்த்தகத்தில் பெரிய மற்றும் சிறிய விற்பனையாளர்களிடையே சமமான போட்டியை உறுதி செய்வது மிகவும் முக்கியம் என்று ஜி20 வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஜி20 வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அவர் ஆற்றிய உரை விவரம்: "இளஞ்சிவப்பு நகரமான ஜெய்ப்பூருக்கு வந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன். இந்தப் பிராந்தியம் ஆற்றல்மிக்க தொழில்முனைவோர்களைக் கொண்டது. வர்த்தகம் என்பது கருத்துக்கள், கலாச்சாரங்கள் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. அதே நேரத்தில் வரலாறு முழுவதும் அது மக்களை நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளது. வர்த்தகமும், உலகமயமாக்கலும் கோடிக்கணக்கான மக்களைத் தீவிர வறுமையிலிருந்து மீட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KaHZrnR
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now