
புதுடெல்லி: உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கவும், நிலக்கரி இறக்குமதியைக் குறைக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மக்களவையில் அவர் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதில்: "உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதிலும், நாட்டில் அத்தியாவசியமற்ற நிலக்கரி இறக்குமதியை குறைப்பதிலும் அரசு கவனம் செலுத்துகிறது. நாட்டின் பெரும்பாலான நிலக்கரித் தேவை உள்நாட்டு உற்பத்தி மற்றும் வழங்கல் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. 2022-23 ஆம் ஆண்டில், நிலக்கரி உற்பத்தி முந்தைய ஆண்டை விட 14.77% அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில், ஜூன், 2023 வரை, உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 8.51 சதவீதம் அதிகரித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Hs3BZgf
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக