
புதுடெல்லி: வரும் பண்டிகைக் காலத்தில் 81 சதவீத வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்க திட்டமிட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் இவ்வாண்டு பண்டிகைக் காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரிக்கும் என்று அமேசான் நிறுவனம் சார்பாக ஆய்வு மேற்கொண்ட நீல்சன் மீடியா தெரிவித்துள்ளது. அடுத்தஇரு மாதங்களில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ளன. பண்டிகை நாட்களையொட்டி மக்கள் ஆடைகள், மொபைல் போன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவது வழக்கமாக மாறியுள்ளது. அதுவும் ஆன்லைன் வழியாக பொருட்கள் வாங்குவது மக்களிடையே பரவலாகியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7R1ntaO
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக