offer for you

வியாழன், 28 செப்டம்பர், 2023

சேந்தநத்தம் பகுதியில் சப்பாத்தி பூச்சி தாக்குதலால் அழியும் வெற்றிலை

புதுச்சேரி: புதுச்சேரியின் முக்கியத் தொழில் விவசாயம். இங்கு நெல், கரும்பு மட்டுமில்லாமல் தோட்டப்பயிர்களும் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. இதில் முக்கியமானது வெற்றிலை. குறிப்பாக வில்லியனூர். சேந்தநத்தம் உட்பட பல பகுதிகளில் வெற்றிலை விளைவிக்கப்படுகிறது. முன்பு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வெற்றிலை விவசாயத்தில் ஈடுபட்டு வந்தன. தற்போது கால மாற்றத்தினால் வெற்றிலை விவசாயம் சரிந்துள்ளது.

தற்போது 200 குடும்பங்கள் மட்டுமே இப்பணியில் உள்ளன. இச்சூழலில், இப்பகுதியில் சப்பாத்தி பூச்சி தாக்கி வெற்றிலை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hixCdbm
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now