offer for you

திங்கள், 30 அக்டோபர், 2023

சிங்குர் ஆலை விவகாரம்: டாடா குழுமத்துக்கு ரூ.766 கோடி செலுத்த மேற்கு வங்க அரசுக்கு உத்தரவு

கொல்கத்தா: கொல்கத்தா மாநிலம் சிங்குரில் உள்ள நானோ தொழிற்சாலையை மூடுவதற்கு மேற்கு வங்க அரசு டாடா குழுமத்துக்குச் சொந்தமான டாடா மோட்டார்ஸுக்கு ரூ.765.78 கோடியை வழங்க வேண்டும் என நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேற்கு வங்க மாநில தொழில் துறை மேம்பாட்டு நிறுவனம் செப்டம்பர் 2016 முதல் 11 சதவீத வட்டியுடன் கணக்கிட்டு இந்த தொகையை வழங்க வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மூலம் மேற்கு வங்க அரசுக்கும், டாடா குழுமத்துக்கும் இடையே நீடித்துவந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் தேசிய பங்குச் சந்தையில் வெளியிட்ட குறிப்பில் இந்தத் தீர்ப்பு குறித்து தெரிவித்துள்ளது. அதில், "சிங்குரில் உள்ள டாடா உற்பத்தி நிலைய பிரச்சினையில், மூன்று பேர் கொண்ட நடுவர் மன்றத்தில் ஒருமித்த தீர்ப்பின் மூலம் தீர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, ரூ.765.78 கோடி இழப்பீடாக திரும்பப் பெறுவதற்கு டாடா மோட்டார்ஸ் உரிமை பெற்றுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ns4YMc9
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now