offer for you

வியாழன், 12 அக்டோபர், 2023

பண்டிகை காலம் நெருங்குவதால் வார்ப்பட நிறுவனங்களுக்கு சீரான பணி ஆணை: கோவை தொழில்துறையினர் தகவல்

கோவை: நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வருவதால் புதிய கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சந்தையில் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கோவை வார்ப்பட தொழில் நிறுவனங்களுக்கு பணி ஆணைகள் சீராக கிடைத்து வருவதாக தொழில்துறையினர் தெரிவித்தனர்.

உற்பத்தி பிரிவில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் வார்ப்படம் முக்கிய மூலப்பொருளாகும். உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா வார்ப்பட உற்பத்தி தொழிலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. கோவை மாவட்டத்தில் 600 வார்ப்பட தொழிற்சாலைகள் உள்ளன. இத்துறையில் பணியாற்றுபவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ra6eho7
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now