offer for you

சனி, 14 அக்டோபர், 2023

காலநிலை மாற்றம், வவ்வால்களால் பேரிக்காய் விளைச்சல் பாதிப்பு: கொடைக்கானல் விவசாயிகள் கவலை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காலநிலை மாற்றம், வவ்வால்களால் பேரிக்காய் விளைச்சல் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கொடைக்கானல், வில்பட்டி, பள்ளங்கி, வடகவுஞ்சி, பெருமாள்மலை, கோம்பை, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நாட்டு பேரிக்காய், தண்ணீர் பேரிக்காய், ஊட்டி பேரிக்காய், வால் பேரிக்காய் மொத்தம் 546 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை பேரிக்காய் சீசன் களைகட்டும். இங்கிருந்து வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு அதிக அளவில் அனுப்பப்படுகின்றன இந்த ஆண்டு ஜூன் மாதம் சீசன் தொடக்கத்தில் தொடர் மழை, கரும்புள்ளி நோய் தாக்குதலால் விளைச்சல் பாதித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QX7BLt6
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now