
பெங்களூரு: கார்பூலிங்க் ஆப்-களுக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை என்றும், அவை சட்டப்பூர்வமாக செயல்பட தேவையான அனுமதியினைப் பெறவேண்டும் என்றும் கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெளிவு படுத்தியுள்ளார். சட்டவிரோதமாக செயல்படும் கார்பூலிங் ஆப்களை தடுத்து நிறுத்துமாறு கார் மற்றும் ஆட்டோ சங்கங்கள் அமைச்சருக்கு கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து அமைச்சரின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்த கார்பூலிங் ஒருங்கிணைப்பாளர்களுடன் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அமைச்சர் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1YsKt70
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக