offer for you

வியாழன், 12 அக்டோபர், 2023

அருப்புக்கோட்டையில் தயாராகும் வாழைநார் பட்டு சேலைகள்!

அருப்புக்கோட்டை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாழைநார் பட்டுச் சேலை உற்பத்தி அருப்புக்கோட்டையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அருப்புக்கோட்டையில் 1,500-க்கும் மேற்பட்ட கைத்தறிக் கூடங்களும், 15 ஆயிரத்துக்கும் அதிகமான விசைத்தறிக் கூடங்களும் உள்ளன. பாலிகாட்டன், பருத்தி, புட்டா ரகங்கள் தவிர 60-60, 80-60, 80-120 என பல்வேறு நூல் ரகங்களில் விசைத்தறி சேலைகள் நெய்யப்படுகின்றன. கைத்தறியில் பருத்திப் புடவைகள் மட்டுமே பெரும்பாலும் நெய்யப்படுகின்றன. அதோடு, வாழை நார் பட்டுச் சேலைகளும் கைத்தறியில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைத்தறியில் தயாரிக்கப்படும் வாழை நார் பட்டுச் சேலை உற்பத்தி அருப்புக்கோட்டையில் விறுவிறுப்பு அடைந்துள்ளது. சின்னத்திரை நட்சத்திரங்கள், விளம்பர நடிகைகள் விரும்பி வாங்கும் இந்த ரக வாழை நார் பட்டுப் புடவைகளுக்கு அண்மைக்காலமாக வரவேற்பு அதிகரித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wmSDza5
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now