offer for you

சனி, 7 அக்டோபர், 2023

பயன்படுத்தாத கிரெடிட் கார்டுக்கு பணம் பிடித்தம் - எஸ்பிஐ வங்கிக்கு அபராதம் @ நெல்லை

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பயன்படுத் தாத கிரெடிட் கார்டுக்கு பணம் பிடித்தம் செய்த சேவை குறை பாட்டுக்காக பாளையங்கோட்டை எஸ்பிஐ வங்கி கிளைக்கு அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,

திருநெல்வேலி அருகே உள்ள தருவை கலைஞர் காலனியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் அரி முத்துக்குமார் என்பவரின் மாத ஊதிய கணக்கானது, பாளையங்கோட்டையிலுள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வங்கி நிர்வாகம் அவரை நிர்பந்தம் செய்து கிரெடிட் கா ர்டு வழங்கி உள்ளது. ஆனால் அந்த கார்டை அவர் பயன்படுத்தவில்லை. அதேநேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்து கடந்த 2019- ம் ஆண்டு முதல் 2022 ம் ஆண்டு வரை ரூ17,742 -ஐ எவ்வித ஒப்புதலும் பெறாமல் வங்கி பிடித்தம் செய்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CQzOFSV
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now