
ராமநாதபுரம்: சாயல்குடி அருகே 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1000 ஏக்கருக்கு மேல் மிளகாய், மல்லி உள்ளிட்ட பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் 50 சதவீத கண்மாய், குளங்கள், பண்ணைக் குட்டைகள் நிரம்பி விட்டன. கமுதி, சாயல்குடி பகுதிகளில் ஓடைகள், வரத்து கால்வாய்களில் பெருக்கெடுத்து ஓடி வரும் காட்டாறு வெள்ளத்தில் பயிர்கள் மூழ்கி வருகின்றன. இப்பகுதிகளில் மிளகாய், மல்லி, ஊடுபயிராக வெங்காயம் மற்றும் உளுந்து உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் பயிரிடப் படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/L2jDn6A
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக