
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டு ராபி பருவம் கடந்த புரட்டாசி மாதம் தொடங்கியது. இங்கு சுமார் 1.70 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், குண்டு மிளகாய், நாட்டுரக கொத்தமல்லி, சின்ன வெங்காயம், பருத்தி சூரிய காந்தி, எள் போன்ற பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டது.
இங்கு உள்ள நிலங்கள் கரிசல், செவல், பொட்டல், குறுமண் போன்ற வகைகளாகும். கடந்த புரட்டாசி மாதம் விதைப்பு செய்து போதிய மழை பெய்யாததால் விதைகள் கெட்டுவிட்டன. அதனை மறுபடியும் உழுது விதைப்பு செய்தனர். சற்று தாழ்வான பகுதி நிலங்களில் முளைத்த விதைகள் மேட்டுப் பகுதியில் முளைக்கவில்லை. வடகிழக்கு பருவ மழை காலதாமதமாக தொடங்கியதால் பயிர்கள் வளமின்றி காணப் படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ea5yrgk
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக